தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி, இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. எனவே, தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது.
இந்நிலையில், இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர், வருமான வரி, சுங்கம், காவல், ரயில்வே, சி.ஆர்.பி.எஃப், அஞ்சல், சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
















