திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் 11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வடிந்த நிலையில், அனைத்து சிலைகளும் பொதுமக்கள் கண்களில் தென்பட்டுள்ளன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், 11 சுவாமி சிலைகளையும் மீட்டு கருவூலத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், இந்த சிலைகளை தங்கள் பகுதியில் வைத்து வழிபட வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















