மகளிர் வங்கி கணக்கில், முன்கூட்டியே 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆட்சி கையை விட்டுப்போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக, மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில், முன்கூட்டியே 5 ஆயிரம் ரூபாய் வரவு வைத்துள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தாலும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு தடை கிடையாது என்பது பாமரர்களுக்குக் கூட தெரியும் எனவும்
திமுகவின் ஏமாற்று வேலையை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கூடுதலாக 6 ஆயிரத்து 550 கோடியை கடனாக வாங்கித்தான் மகளிர் உரிமை தொகையை வழங்கியுள்ளது எனவும்
தமிழக அரசு பெற்ற இக்கடன் தங்கள் தலையில்தான் விழும் என்பது தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
( வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள் என கூறியுள்ள அன்புமணி, மே மாதத்தில் வரும் தேர்தல் முடிவு அதை உறுதி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
















