திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மணப்பாறை அருகே பூமாலைப்பட்டியில் தமிழக அரசின் ஒழுங்குமுறை கூடம் உள்ளது. இங்கு அரிசி போன்ற உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டு, லாரிகள் மூலம் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், குடோன் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளதால், குடோனில் வண்டுகள் உருவாகி தானியங்களை நாசம் செய்வதுடன், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே, குடோனை முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















