ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஏ.பி. கணபதியை மர்ம கும்பலால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமுதியைச் சேர்ந்த ஏ.பி.கணபதி தனது வீட்டில் இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த கும்பல் ஒன்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், மர்ம கும்பல் தப்பிச்சென்றது.
இதில் பலத்த காயமடைந்த கணபதி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
உடனடியாக மீட்கப்பட்ட அவர், முதலுதவிக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















