உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்தியா தலைமை வகிப்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற இந்தியா – பிரான்ஸ் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்கள் இருப்பதை பட்டியலிட்டார்.
Alphabet நிறுவனத்தின் CEO, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO, IBM CEO, Adobe CEO என அனைத்து முன்னணி நிறுவனங்களிலும் இந்தியர்களே CEO-களாக இருப்பதாக குறிப்பிட்டார்.
உலகப்புகழ் பெற்ற சேனல் நிறுவனத்தின் சிஇஓ கூட மகாராஷ்டிராவை சேர்ந்தவர் தான் என்றும் சுட்டிக்காட்டிய மேக்ரான், புதுமைகளை படைப்பதில் வெறும் பங்கேற்பாளராக மட்டுமின்றி, புதுமைகளை படைப்பதில் இந்தியா தலைமை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா புதுமைகளை உருவாக்குகிறதா? என்பது இனி கேள்வியே இல்லை என கூறிய மேக்ரான், இந்தியாவுடன் இணைந்து யார் புதுமைகளை உருவாக்குகிறார்கள் என்பதே கேள்வி என்றும் தெரிவித்துள்ளார்.
















