பாஜகவில் இருந்து 20 முதல் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்றும், இறைவன் நினைத்தால் நிச்சயமாக அமைச்சர்களாக கூட நியமிக்கப்படுவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவுமகாலில் திறந்து வைக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இதனை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க.தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், பாஜகவில் இருந்து 20 முதல் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என நினைப்பதாக கூறினார். பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பிறகு தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைமை பேசும் எனவும் தெரிவித்தார்.
















