கடலூரில் புதிதாக தொடங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் செயல்பாட்டில் இல்லையென மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் 20 மாட்டங்களில், 14 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான “விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை” மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 16ம் தேதி திறந்து வைத்தார்.
இந்தநிலையில், கடலூரில் மாவட்ட வளர்ச்சி மையத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் பெயரளவுக்கு மட்டும் இச்சேவை மையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பணியாளர்கள் யாரும் இல்லைனெவும் மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதால் திமுகவினர் மிரட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான செல்போன்கள் வழங்கப்படவில்லை எனக்கூறி, மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்குவதற்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் அனைவருக்கும் மற்றொரு நாளில் செல்போன் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் 5 மணி நேரமாக காத்திருந்த தங்களை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறினர். மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், கண்டன கோஷங்களை எழுப்பினர்.

















