டெல்லியில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டை கொண்டாடினார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இன்று தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி டெல்லியில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, சுவாமி படங்களுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு, முருகப்பெருமானின் புகைப்படத்தை சிபி ராதாகிருஷ்ணன் பரிசளித்தார்.
















