சட்டமன்ற தேர்தலில் என்டிஏ தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எனவும், இபிஎஸ் முதலமைச்சராக பதவியேற்பார் எனவும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிவகாசி தொகுதியின் தலைமை தேர்தல் அலுவலகத்தை அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக தலைவர்கள் தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிசாமி மீது கோபக்கனைகளை வீசுவதாகவும், திமுக ஆட்சியில் போதைக் கலாச்சாரம், பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், தேர்தலில் என்டிஏ வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி நிச்சயம் முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
















