சென்னையில் அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனம் உட்பட 5 இடங்களில் மேற்கொண்டு வந்த வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்தது.
அமைச்சரும், துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளருமான சேகர்பாபுவின் மகன்களான விக்னேஷ், ஜெயசிம்மன் நடத்தும் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சென்னை மயிலாப்பூர் சிவசாமி சாலையில் உள்ள நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோன்று, வடபழனியில் உள்ள அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் அருள்முருகன் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், அமைச்சரின் மகன்களின் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















