பெரியபாளையம் அருகே விபத்து ஏற்பட்ட இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இரண்டாவது நாளாக அமோனியா வாயு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடந்த 21ஆம் தேதி இறால் பதப்படுத்தும் பண்ணையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இதனால், வடமாநில தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டு 2 வாரங்களுக்கு பிறகு, அமோனியா வாயுவை அகற்றும் பணி, மாவட்ட ஆட்சியர் கவிதா மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
நேற்று 75 சதவீதப் பணி நிறைவடைந்த நிலையில், இரண்டாவது நாளாக அமோனியா வாயு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், 300 மீட்டர் சுற்றளவில் காவல்துறையினர் தடுப்பை ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.
















