ஹூஸ்டனில் நடைபெற்ற உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுப் போட்டியில் கனடாவை 3-க்கு பூஜ்ஜீயம் என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மொராக்கோ அணி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் கனடா – மொராக்கோ அணிகள் மோதின.
போட்டி முழுவதும் மொராக்கோ அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில்,
அந்த அணி வீரர் அஜெடின் ஆவ்னாஹி 50வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
தொடர்ந்து 82வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்த ஆவ்னாஹி, மொராக்கோவின் முன்னிலையை 2க்கு பூஜ்ஜியம் ஆக உயர்த்தினார்.
கூடுதல் நேரத்தின் 98-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் சவுபியான் ரகீமி 3வது கோலை பதிவு செய்தார்.
இதன்மூலம் ஆட்ட நேர முடிவில் மொராக்கோ அணி 3-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
















