மக்கள் தங்கள் பிரச்னைகளை தன்னிடம் தெரிவித்தால், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என ஆளுநர் அர்லேக்கர் உறுதியளித்துள்ளார்.
சென்னை கிண்டி மக்கள் மாளிகையில், சமூக சேவகர் பத்மஸ்ரீ பிகு ராம்ஜி இடாதேவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட, ‘பில்கிரிம் ஆஃப் சமரசதா’ என்ற ஆங்கில நூலை ஆளுநர் அர்லேகர் வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர், இந்த நூல் ஒரு வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, சமூகத்தின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு தீர்வு காண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் நூல் என்று தெரிவித்தார்.
மேலும், சமூக நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறிய அவர், மக்கள் தங்களது பிரச்னைகளை தன்னிடம் தெரிவித்தால், புதிய அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.
















