2031ஆம் ஆண்டுக்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கவும், அதன் உட்கட்டமைப்பை விரைவுபடுத்தவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2031ஆம் ஆண்டிற்குள் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பல்வேறு கொள்கை சார்ந்த முன்னெடுப்புகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, அனுமதிக்கப்பட்ட மின்சுமை வரம்பிற்குள் அமைக்கப்படும் EV சார்ஜிங் வசதிகளுக்கு தனி துணை மின்மீட்டர் அமைக்க அனுமதி வழங்கப்படும்.
தற்போதுள்ள நுகர்வோரின் மின்சுமை மற்றும் கட்டணப் பிரிவை பாதிக்காமல் தேவையுள்ள இடங்களில் மின்வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பிற்காக தனியாக ஒரு புதிய மின்சேவை இணைப்பை பெறவும் அனுமதி வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















