நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் வலுத்த நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20ம் தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் தொடரும் போராட்டங்களுக்கு இடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
















