வினாத்தாள்களை கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க, புதிய சட்டத்திருத்த மசோதா வழிவகை செய்கிறது.
இதன்படி, தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான சிறைத்தண்டனை மூன்று ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது – அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி நபர் குற்றங்களுக்கான அபராத தொகை 10 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவை வலையமைப்பாக செய்யும் கும்பல்களுக்கு குறைந்தபட்ச தண்டனை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவர்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 1 கோடி ரூபாயில் இருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
தனியார் ஏஜென்சிகள் வினாத்தாள் கசியவிட்ட புகாரில் சிக்கினால், 5 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை போலீஸ் அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகள் இரு மாதங்களில் முடிக்க மசோதாவில் காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும்,
விரைவு நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மேல்முறையீட்டு மனுக்களும் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என புதிய சட்டத்திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















