அமெரிக்காவில் பாருக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
அலபாமாவின் பர்மிங்காமில் ஹோட்டல்கள், பாருக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.