250 மில்லியன் ஆண்டு பூமியின் ரகசியம் : கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
Jun 23, 2026, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

250 மில்லியன் ஆண்டு பூமியின் ரகசியம் : கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Murugesan M by Murugesan M
Mar 17, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூமியின் மேற்பரப்பிலிருந்து 410 முதல் 660 கிலோமீட்டர் கீழே அமைந்துள்ள மேன்டில் மாற்ற மண்டலத்தில் வழக்கத்துக்கு மாறாக அடர்த்தியான பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கடலில் புதைந்து கிடந்த பண்டைய கால கடற்பரப்பு, பூமியின் ஆழமான ரகசியங்களை வெளிப்படுத்துகிறது.

இந்த புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஏன் முக்கியமானது ? இதனால், எதிர்காலத்தில் பூமியின் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பூமியின் ஆழத்தை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், நமது பூமியின் அடுக்குகளின் படத்தை உருவாக்க புவியியலாளர்கள் பல்வேறு அறிவியல் முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

பூமியின் அடுக்குகளை மேலோடு,மேன்டில், வெளிப்புற மையம், மற்றும் உள்மையம் என்று நான்கு வகையாக விஞ்ஞானிகள் பிரித்துள்ளனர்.

நாம் பூமியின் மீது நடக்கும் பகுதியே பூமியின் மேலோடு எனப்படுகிறது. இந்த பகுதி நிலம் மற்றும் கடல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிலப்பகுதி 35 முதல் 70 கிலோமீட்டர் குறைந்த அடர்த்தி கொண்டதாகும். பெரும்பாலும் கிரானைட் பாறையால் ஆனதாகும். கடலின் பெரும்பகுதியை கடல் மேலோடு உருவாக்குகிறது 5 – 7 கிலோமீட்டர் அடர்த்தியாகவும், பெரும்பாலும் பாசால்ட் பாறைகளால் ஆனதாகவும் உள்ளது. வேடிக்கை என்னவென்றால், பூமியின் மொத்த அளவில் 1 சதவீதம் மட்டுமே மேலோடு ஆகும்.

மேலோட்டத்திற்குக் கீழே கவசம் போல உள்ள பகுதியே மேன்டில் எனப்படுகிறது. அரை திரவமாக உள்ள இந்தப்பகுதி பிளாஸ்டிக் போன்றதாகும். 2,900 கிமீ தடிமன் கொண்ட இது பூமியின் மொத்த அளவில் 84 சதவீதம் ஆகும். இது 3 முக்கிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேன்டலுக்கு அடியில் உள்ள பகுதியே பூமியின் வெளிப்புற மையப்பகுதியாகும். திரவ இரும்பு மற்றும் நிக்கல் அடுக்குகளான இந்த பகுதி சுழலும் போது, சுழன்று பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. இந்த காந்தப்புலம் தான் சூரியனின் அதிக கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. வெளிப்புற மையப்பகுதி 2,200 கிலோமீட்டர் தடிமன் கொண்டதாகும்.

பூமியின் மிக ஆழமான அடுக்கு தான் உள் மையப்பகுதி எனப்படுகிறது. இது இரும்பு மற்றும் நிக்கலால் ஆனதாகும். அழுத்தம் மிக அதிகமாக இருப்பதால் இனி உலோகங்கள் திரவமாக இருக்காது. 1,230 முதல் 1,530 கிலோமீட்டர் தடிமன் கொண்ட உள் மையப்பகுதியின் வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பைப் போலவே வெப்பமாக இருக்கும். இதன் வெப்ப நிலை 6000 டிகிரி செல்ஸியஸ் ஆகும். பூமியின் இந்த உள் மையப்பகுதி ஆண்டுக்கு 1 மில்லிமீட்டர் அளவு வளர்ந்து வருகிறது

இந்நிலையில் தான், 250 மில்லியன் ஆண்டுகளாகப் புதைக்கப்பட்ட, பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் மறைக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய கடற்பரப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

தென்கிழக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள டெக்டோனிக் தட்டு எல்லையான கிழக்கு பசிபிக் எழுச்சியை மேரிலாந்து பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.

புவியியல் முதுகலை ஆய்வாளர் ஜிங்சுவான் வாங் தலைமையிலான இந்த ஆராய்ச்சிக் குழு, டைனோசர்களின் காலத்தில் பூமியின் மேன்டலில் மூழ்கிய ஒரு பண்டைய கடற்பரப்பை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வில், நில அதிர்வு அலைகளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் மேன்டலுக்குள் ஆழமான கட்டமைப்புகளின் விரிவான வரைபடங்களை உருவாக்கியுள்ளனர்.

பூமியின் மேற்பரப்பிலிருந்து 410 முதல் 660 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மேன்டில் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு தடிமனான பகுதியை ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

Science Advances இதழில்,வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை ,பூமியின் உட்புறம் குறித்த முந்தைய ஆய்வு முடிவுகளைத் தலைகீழாக மாற்றி இருக்கிறது.

நீண்ட காலமாகவே விஞ்ஞானிகள், கடல் மேலோடு பகுதி, மேன்டலுக்குள் விரைவில், கலந்து கரைகிறது என்று நம்புகின்றனர்.

பண்டைய அடுக்குகள் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளாக நீடிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது பூமியின் கீழுள்ள தட்டுக்களின் நகர்வு பற்றிய பழைய ஆய்வு முடிவுகளுக்கு நேர் எதிராக உள்ளது.

இந்த புதைக்கப்பட்ட கடற்பரப்பில் உள்ள பொருள் தாங்கள் எதிர்பார்த்ததை விட மெதுவாக நகர்கிறது என்று ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பூமியின் புவியியல் பரிணாம வளர்ச்சியில் புதிய நுண்ணறிவுகளை வழங்குவதோடு, பூமியின் கடந்த காலத்தையும் பிற கிரக ரகசியங்களையும் அறிந்து கொள்ள இந்த ஆராய்ச்சி தூண்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆராய்ச்சியை, பசிபிக் பெருங்கடலின் பிற பகுதிகளுக்கும், அதற்கு அப்பாலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

பூமியின் ஆழமான உட்புறத்தில் இன்னும் பல பண்டைய அமைப்புக்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன என்று ஆய்வுக் குழுவின் தலைவர் ஜிங்சுவான் வாங் கூறியுள்ளார்.

 

Tags: The secret of the 250 million years old Earth: Scientists discover!250 மில்லியன் ஆண்டு பூமியின் ரகசியம்விஞ்ஞானிகள்பூமி
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் ஊழலில் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம் : அண்ணாமலை

Next Post

மதுபான ஊழலைப் பற்றி முழு தகவல்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் :  தமிழிசை சௌந்தரராஜன்

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies