பாக்ஸ் ஆபிஸில் தூள் கிளப்பும் துரந்தர் திரைப்படம் : மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
Mar 15, 2026, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாக்ஸ் ஆபிஸில் தூள் கிளப்பும் துரந்தர் திரைப்படம் : மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகி இருக்கும் துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி இருக்கிறது. அதுமட்டுமல்ல, காந்தகார் விமான கடத்தல் சம்பவத்திலும், 2001-ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட நாடாளுமன்ற தாக்குதலிலும் பாகிஸ்தானின் பின்னணியை தோலுரித்து காட்டியிருக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

ஆதித்ய தர் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் ஒரு வாரத்தில் 200 கோடி வசூல் செய்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ச்சியான வரவேற்பை பெற்று வருகிறது. உரி படத்தை இயக்கிய ஆதித்ய தர், துரந்தர் படத்தையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலேயே இயக்குவார் என பூஜை போட்ட நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியது.

படம் திரைக்கு வருவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியான ட்ரெய்லர் காட்சிகள் இதை உறுதிப்படுத்தவே, FDFS பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். 1999-ம் ஆண்டில் காந்தகார் விமானக் கடத்தல் மற்றும் 2001-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தாக்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலை வேரறுக்க இந்திய உளவுத்துறைத்தலைவர் அஜய் சன்யால் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையே, துரந்தர் படத்தின் கதைச்சுருக்கம்.

சிறைவாசம் அனுபவிக்கும் பஞ்சாப்பை சேர்ந்த இளைஞனுக்கு இந்திய உளவுத்துறை உரிய பயிற்சிகள் வழங்கி, எவ்வாறு பாகிஸ்தானுக்குள் அனுப்பியது என்ற உண்மை கதை சினிமா பாணியில் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறை தலைவர் அஜய் சன்யால் வேடத்தில் நடிகர் மாதவனும், பஞ்சாப்பை சேர்ந்த இளைஞனாக ரன்வீர் சிங்கும் பின்னிப் பெடல் எடுத்துள்ளனர். மிடுக்கான தோற்றத்தில் நடிகர் சஞ்சய் தத்தும் தன் பங்கிற்கு அதிரடி காட்டியிருக்கிறார். படம் பார்க்கும் எவரையும் சீட் நுனிக்கு நகர்த்தும் திரைக்கதை இருப்பதால், துரந்தர் திரைப்படம் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்துள்ளது. வேலை நாட்களில் மார்னிங் மற்றும் மேட்னி ஷோக்களில் கூட்டம் சற்று குறைந்தாலும், ஈவினிங் மற்றும் நைட் ஷோவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. உரி திரைப்படத்தின் ஒட்டுமொத்தமான கலக்ஷனை இந்த வாரத்திலேயே துரந்தர் படம் முறியடிக்கும் எனத் திரை விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே, இந்தியாவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த துரந்தர் திரைப்படத்தை, வளைகுடா நாடுகளில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேகம் உள்ளிட்ட நாடுகளில் பாலிவுட் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய மார்கெட் உள்ள நிலையில், இந்தத் தடை உத்தரவு படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றத்தைத் தந்துள்ளது. ஆனால், என்ன பண்ணுவது, உண்மை சம்பவத்தை மறைத்து விட்டா படம் எடுக்க முடியும் எனத் துணிந்துள்ள படக்குழு, எந்த இழப்பாக இருந்தாலும் சரி என்ற முடிவுக்கு வந்திருப்பதாகப் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: cinema newsThe movie Duranthar is a box office sensation: A thrilling true storynews cinema
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி!

Next Post

கேரளா உள்ளாட்சி தேர்தலில் துடைத்தெறியப்பட்ட திமுக!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies