திருமலையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம் -6 இடங்களில் கூண்டுகள் அமைப்பு
Jan 19, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமலையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம் -6 இடங்களில் கூண்டுகள் அமைப்பு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 20, 2023, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருமலையில் பக்தர்கள் மலையேறி செல்லும் பாதைகளில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் இருப்பதை அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனிடையே கண்காணிப்பு கேமரா பதிவுகளில் சிறுத்தை , கரடிகள் நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே இவற்றைப் பிடிக்க 6 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் மலைப்பாதையில் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து, புதிய அறங்காவலராக பதவியேற்ற திருப்பதி சட்டமன்ற உறுப்பினரான கருணாகர் ரெட்டி, திருமலைக்கு மலையேறி செல்லும் பக்தர்களுக்குக்  கைத்தடி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினார்.

அலிபிரி மலைப்பாதையில் 7-வது மைல், லட்சுமி நரசிம்மர் கோயில் பகுதிகளில் 320 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை பீதியால் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளிலும் பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் மார்க்கத்தில் ‘எலிபஃன்ட் காட்’ பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் வனத் துறையினர் கண்டறித்துள்ளனர். மேலும், திருமலையில் உள்ள இணை நிர்வாக அதிகாரி அலுவலகத்தின் பின்புறம் கரடி ஒன்றின் நடமாட்டத்தையும் அவர்கள் அறிந்துள்ளனர்.

இதுதவிர ஸ்ரீவாரி மெட்டு மார்க்கத்திலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதைக்  கண்காணிப்பு கேமரா பதிவு செய்துள்ளது. திருமலைக்குப் பக்தர்கள் செல்லும் வழிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து இவற்றைப் பிடிக்க 6 இடங்களில் கூண்டுகள் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags: andrapradeshthirupadhicheetah
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி!

Next Post

உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் – 7 பேர் பலி!

Related News

சமயநல்லூர் அருகே டயர் வெடித்ததால் அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து : 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

வாக்குறுதியை நிறைவேற்ற கோருபவர்கள் மீது கைது நடவடிக்கை – தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

ராமநாதபுரம் அருகே பெண் காவலர் கழிவறையில் வீடியோ எடுத்த விவகாரம் – சிறப்பு எஸ்ஐ கைது!

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – குற்றபத்திரிகையில் விஜய் பெயர்?

திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!

நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

குன்னூரில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சேலம் அருகே காவலரை தாக்கிய இளைஞர் கைது!

ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை  பறித்த ஆம்னி பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம் என எச்சரிக்கை – தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாக செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிப்பு – பேராசிரியர்கள் குற்றச்சாட்டு!

80, 000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது – சமூக ஆர்வலர்கள் வேதனை!

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவவை கூட்டத்தொடர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies