டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ததில் 397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுகுறித்த விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
















