மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கம் மாநிலத்தில் முதற்கட்டமாக கடந்த 23ம் தேதி 152 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
இதற்காக 142 தொகுதிகளிலும் சுமார் 41 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட தேர்தல் அன்று பல இடங்களில் வன்முறை வெடித்த நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 27 ஆயிரத்து 300 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















