உலகின் ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உரையாற்றிய அவர், இந்தியா, உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் என்றும், 1990களிலும் 2000-த்தின் ஆரம்பத்திலும் எடுத்த முயற்சிகள், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், டெல்லி NCR, மும்பை ஆகிய இடங்களில் நடந்த சிறந்த பணிகள் இந்தியாவை நம்பகமான ஐடி சேவை நாடாக உருவாக்கியதாகவும் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ‘Make in India’ திட்டத்தை தொடங்கியபோது, முதலில் கவனம் செலுத்தியது மின்னணு உற்பத்தி துறை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















