கடந்த காலத்தில் சிக்கிமின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுத்தது என்றும், கிழக்கு நோக்கி வேகமாக செயல்படு என்ற கொள்கையை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநிலம் நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு விழா காங்டாக் பகுதியில் கோலாகமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ‘அஷ்டலட்சுமிகள்’ என்று வர்ணித்தார்.
‘கிழக்கு நோக்கிச் செயல்படு’ மற்றும் ‘வேகமாகச் செயல்படு’ என்ற கொள்கைகளை மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, கடந்த காலத்தில் சிக்கிமின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுத்ததாக குற்றம்சாட்டினார்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பே இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு ரயில் பாதை சிக்கிம் மாநிலத்தை வந்தடைய உள்ளதாக கூறினார். மேலும், , நாட்டின் மொத்தத் தாவரப் பன்முகத்தன்மையில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவை சிக்கிமிலேயே காணப்படுகின்றன எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
















