உ.பி. விடுதியில் பகீர்: 2 துப்பாக்கிகள், 30 வெடிகுண்டுகள் பறிமுதல்!
Feb 15, 2026, 11:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி. விடுதியில் பகீர்: 2 துப்பாக்கிகள், 30 வெடிகுண்டுகள் பறிமுதல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 20, 2023, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேசத்தில் விடுதியில் இருந்து 2 துப்பாக்கிகள், 30 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்திலுள்ள விடுதி ஒன்றில் அறை எண் 57-ல் 2 சிறுவர்கள் தங்கி இருந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று நள்ளிரவில் திடீரென மோதல் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி இருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காவல்துறையினரைக் கண்டதும், இரு சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அந்த அறையை சோதனை செய்தனர். அப்போது, அந்த அறையில் 2 கைத்துப்பாக்கிகளும், 30 வெடிகுண்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜுபால் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை கொலை செய்தது அம்மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், மிகப்பெரிய தாதாவுமான சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ஆதிக் அகமது. இக்கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞர் உமேஷ் பால் யாதவ். இவரும், கடந்த பிப்ரவரி மாதம் ஆதிக் அகமது ரவுடி கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இவரது கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி ஒருவரை, இதே விடுதியில் இருந்துதான் காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இச்சிறுவர்களுக்கும் உமேஷ் பால் யாதவ் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதேசமயம், இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆதிக் அகமதுவின் மகனை காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர். அதேபோல, ஆதிக் அகமதுவையும் கடந்த மே மாதம் மர்ம கும்பல் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியது – ரோஸ்கோஸ்மோஸ் அறிவிப்பு

Next Post

இமாச்சல் மழை, வெள்ள பாதிப்பு: ஜெ.பி.நட்டா ஆய்வு!

Related News

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு – நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி ?

டி-20 லீக் போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி அல்ல ‘போர்’

நிஜ்ஜார் வழக்கில் கனடாவுடன் சேர்ந்து பணியாற்ற இந்தியா விருப்பம்!

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

வி.கே.சசிகலா தலைமையில் வரும் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

தனியார் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மாணவர்களின் நிகழ்த்திய முருகர் நாடகம்.. பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், நாட்டியாஞ்சலி விழா – உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்கள்பங்கேற்பு

காங்கிரஸ் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து -அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த கட்சி பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து

இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்திய பிரபுதேவா!

ஏஐ 18 மாதங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் – மைக்ரோசாப்ட் அதிகாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies