உ.பி. விடுதியில் பகீர்: 2 துப்பாக்கிகள், 30 வெடிகுண்டுகள் பறிமுதல்!
Sep 9, 2026, 12:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி. விடுதியில் பகீர்: 2 துப்பாக்கிகள், 30 வெடிகுண்டுகள் பறிமுதல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 20, 2023, 07:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப் பிரதேசத்தில் விடுதியில் இருந்து 2 துப்பாக்கிகள், 30 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்திலுள்ள விடுதி ஒன்றில் அறை எண் 57-ல் 2 சிறுவர்கள் தங்கி இருந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று நள்ளிரவில் திடீரென மோதல் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி இருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காவல்துறையினரைக் கண்டதும், இரு சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அந்த அறையை சோதனை செய்தனர். அப்போது, அந்த அறையில் 2 கைத்துப்பாக்கிகளும், 30 வெடிகுண்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜுபால் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை கொலை செய்தது அம்மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், மிகப்பெரிய தாதாவுமான சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ஆதிக் அகமது. இக்கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞர் உமேஷ் பால் யாதவ். இவரும், கடந்த பிப்ரவரி மாதம் ஆதிக் அகமது ரவுடி கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இவரது கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி ஒருவரை, இதே விடுதியில் இருந்துதான் காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இச்சிறுவர்களுக்கும் உமேஷ் பால் யாதவ் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதேசமயம், இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆதிக் அகமதுவின் மகனை காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர். அதேபோல, ஆதிக் அகமதுவையும் கடந்த மே மாதம் மர்ம கும்பல் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியது – ரோஸ்கோஸ்மோஸ் அறிவிப்பு

Next Post

இமாச்சல் மழை, வெள்ள பாதிப்பு: ஜெ.பி.நட்டா ஆய்வு!

Related News

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் ; 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்; விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்பிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

5 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies