அமைச்சர் சேகர் பாபுவால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டுள்ள தவெக வேட்பாளர் சினோரா அசோக்கை அமைச்சரும் திமுக வேட்பாளருமான சேகர்பாபு தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சேகர்பாபு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினோரா அசோக் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், சேகர்பாபுவால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து பேட்டியளித்த சினோரா அசோக், சேகர்பாபுவின் ஆதரவாளர்கள் முகமூடி அணிந்துகொண்டு தன்னை நோட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
















