காங்கிரசுக்கு ஏழைகளின் சொத்துக்கள் மற்றும் இடஒதுக்கீட்டை பறிப்பதை தவிர வேறு எதையும் சிந்திக்க தெரியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
ஜூன் 4ஆம் தேதி ஜாம்ஷெட்பூரில் என்ன முடிவு வரும் என்பதை மக்களின் உற்சாகமே சொல்கிறது என தெரிவித்தார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதுடன் இந்தியாவை பலப்படுத்தும் தேர்தலாக அமையப்போகிறது என கூறினார்.
மேலும், காங்கிரசுக்கும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கும் நாட்டின் வளர்ச்சி குறித்து எதுவும் தெரியாது என விமர்சித்தார்.
ஏழைகளின் சொத்துக்களை அபகரிப்பதில் காங்கிரஸ்
குறியாக உள்ளதாக கூறிய அவர், எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டைப் பறிக்க நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.