பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுஅதிகரிப்பு ; மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்
Aug 8, 2026, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுஅதிகரிப்பு ; மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 11:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 200 % அதிகரிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்

மேகாலயாவின் ஷில்லாங்கில் வர்த்தக சமூகம், இளைஞர்கள் – பெண்கள் பிரதிநிதிகளுடன் மத்திய பட்ஜெட் – 2024 குறித்த விவாதத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான பாதையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றார். இளைஞர்கள், பெண்கள், பழங்குடியின சமூகங்களை வளர்ச்சி அடையச் செய்வதன் மூலம் வடகிழக்குப் பிராந்தியத்தின் தொழில், வேளாண் துறைகளை மேம்படுத்துவதை இந்த பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். நாட்டின் வடகிழக்குப் பகுதி இந்த பட்ஜெட்டின் மூலம் அதிக பயனடைகிறது என்று  சோனோவால் கூறினார்.

பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த கூட்டத்தில் பேசிய  சர்பானந்தா சோனோவால், பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது 200 % அதிகம் என்றும் கூறினார்.

பழங்குடியின சமூகங்களுக்கு சமூக நீதியை வழங்குவதற்கான மற்றொரு முக்கிய திட்டமான பிரதம மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இது பழங்குடி சமூகங்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இதன் மூலம் 63,000 கிராமங்களில் உள்ள 5 கோடி பழங்குடியின மக்கள் நேரடியாக பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்குப் பகுதியில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் காரணமாக இந்தப் பிராந்தியத்தில், விவசாய விளைபொருட்களின் உற்பத்தி வாய்ப்புகள் பெரிதும் மேம்படும் என்று அவர் தெரிவித்தார்.

வடகிழக்குப் பகுதியில் சாலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 2024 மத்திய பட்ஜெட்டில் ரூ. 19,338 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது இப்பகுதியில் சுற்றுலா உள்கட்டமைப்பை பெரிதும் மேம்படுத்தும் என்றும்  சர்பானந்த சோனோவால் கூறினார்.

Tags: meghalayaSarbananda SonowalbudgetBudget to empower tribal communitiesShillong
Share
Tweet
SendShare
Previous Post

விருதுநகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது

Next Post

பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies