சென்னையில் கொட்டி தீர்த்த மழை - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!
Nov 17, 2025, 11:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த மழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

Web Desk by Web Desk
Nov 30, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடி எம்ஜிஆர் நகரில் காலை முதல் பெய்து வந்த கனமழை காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாயம்மாள் தெரு ரயில் நிலைய மேம்பால சாலை, மின்வாரிய அலுவலகம் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மற்றும் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வடசென்னையில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் கீழ்ப் பகுதியில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலம் பகுதியிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்தால் புதுச்சேரி சின்ன காலாப்பட்டு பகுதியில் கடற்கரை ஓரம் இருக்கும் தனியார் விடுதிகள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தின்கீழ் மழைநீர் தேங்கிக் குளம் போல் காட்சியளித்தது. இதனால் பெருங்களத்தூர் டிடிகே நகரில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரட்டூர் வடக்கு பிரதான சாலைகளில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

புயல் காரணமாக சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் பொதுமக்கள் கார்களை பாதுகாப்புக்காக நிறுத்த தொடங்கினர். இதேபோல பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் மக்கள் வரிசையாக வாகனங்களை அணிவகுத்து நிறுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தண்ணீர் புகுந்தது. கோயிலின் மேல்தளத்தில் இருந்து விழுந்த தண்ணீர் பிராகார பாதை முழுவதும் தேங்கியதால், பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றனர்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில், சாக்கடை கழிவுகளுடன் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கனமழை காரணமாக, தாமரை ஏரி நீர் மற்றும் கழிவு நீர் கலந்து கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் சாலையில் கடந்து செல்ல முடியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

Tags: rain alertweather updatelow pressurerain warningmetrological centerfengaltamilnadu rainheavy rainchennai floodchennai metrological center
ShareTweetSendShare
Previous Post

ஃபெஞ்சல் புயல் – புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் மழை!

Next Post

சபரிமலையில் ஒரே நாளில் சுமார் 80,000 பக்தர்கள் தரிசனம்!

Related News

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

பயங்கரவாத டாக்டர்  உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளி கைது!

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies