சென்னையில் கொட்டி தீர்த்த மழை - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!
Mar 19, 2026, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த மழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

Murugesan M by Murugesan M
Nov 30, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடி எம்ஜிஆர் நகரில் காலை முதல் பெய்து வந்த கனமழை காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாயம்மாள் தெரு ரயில் நிலைய மேம்பால சாலை, மின்வாரிய அலுவலகம் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மற்றும் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வடசென்னையில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் கீழ்ப் பகுதியில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலம் பகுதியிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்தால் புதுச்சேரி சின்ன காலாப்பட்டு பகுதியில் கடற்கரை ஓரம் இருக்கும் தனியார் விடுதிகள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தின்கீழ் மழைநீர் தேங்கிக் குளம் போல் காட்சியளித்தது. இதனால் பெருங்களத்தூர் டிடிகே நகரில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரட்டூர் வடக்கு பிரதான சாலைகளில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

புயல் காரணமாக சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் பொதுமக்கள் கார்களை பாதுகாப்புக்காக நிறுத்த தொடங்கினர். இதேபோல பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் மக்கள் வரிசையாக வாகனங்களை அணிவகுத்து நிறுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தண்ணீர் புகுந்தது. கோயிலின் மேல்தளத்தில் இருந்து விழுந்த தண்ணீர் பிராகார பாதை முழுவதும் தேங்கியதால், பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றனர்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில், சாக்கடை கழிவுகளுடன் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கனமழை காரணமாக, தாமரை ஏரி நீர் மற்றும் கழிவு நீர் கலந்து கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் சாலையில் கடந்து செல்ல முடியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

Tags: weather updatelow pressurerain warningmetrological centerfengaltamilnadu rainheavy rainchennai floodchennai metrological centerrain alert
ShareTweetSendShare
Previous Post

ஃபெஞ்சல் புயல் – புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் மழை!

Next Post

சபரிமலையில் ஒரே நாளில் சுமார் 80,000 பக்தர்கள் தரிசனம்!

Related News

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies