சென்னையில் கொட்டி தீர்த்த மழை - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!
Oct 2, 2025, 04:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் கொட்டி தீர்த்த மழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

Web Desk by Web Desk
Nov 30, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடி எம்ஜிஆர் நகரில் காலை முதல் பெய்து வந்த கனமழை காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாயம்மாள் தெரு ரயில் நிலைய மேம்பால சாலை, மின்வாரிய அலுவலகம் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மற்றும் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வடசென்னையில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் கீழ்ப் பகுதியில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலம் பகுதியிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்தால் புதுச்சேரி சின்ன காலாப்பட்டு பகுதியில் கடற்கரை ஓரம் இருக்கும் தனியார் விடுதிகள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தின்கீழ் மழைநீர் தேங்கிக் குளம் போல் காட்சியளித்தது. இதனால் பெருங்களத்தூர் டிடிகே நகரில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரட்டூர் வடக்கு பிரதான சாலைகளில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

புயல் காரணமாக சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் பொதுமக்கள் கார்களை பாதுகாப்புக்காக நிறுத்த தொடங்கினர். இதேபோல பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் மக்கள் வரிசையாக வாகனங்களை அணிவகுத்து நிறுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தண்ணீர் புகுந்தது. கோயிலின் மேல்தளத்தில் இருந்து விழுந்த தண்ணீர் பிராகார பாதை முழுவதும் தேங்கியதால், பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றனர்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில், சாக்கடை கழிவுகளுடன் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கனமழை காரணமாக, தாமரை ஏரி நீர் மற்றும் கழிவு நீர் கலந்து கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் சாலையில் கடந்து செல்ல முடியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

Tags: rain warningmetrological centerfengaltamilnadu rainheavy rainchennai floodchennai metrological centerrain alertweather updatelow pressure
ShareTweetSendShare
Previous Post

ஃபெஞ்சல் புயல் – புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் மழை!

Next Post

சபரிமலையில் ஒரே நாளில் சுமார் 80,000 பக்தர்கள் தரிசனம்!

Related News

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies