மலிவு விலையில் தரமான உணவு : உதான் யாத்ரீ கபே!
Aug 24, 2025, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மலிவு விலையில் தரமான உணவு : உதான் யாத்ரீ கபே!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான நிலையங்களில் குறைந்த விலையில் டீ, காபி உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் உதான் யாத்ரீ கபே கடையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார். விமானப் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் உதான் யாத்ரீ கபே குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு இருப்பது விமானப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உதான் யாத்ரி கபே எனும் பெயரில் மலிவு விலை உணவகங்களை தொடங்க முடிவு செய்தது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் உதான் யாத்ரி கபே மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டது. மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய்க்கு அந்த கபேவில் விற்பனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்தில் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்த விமான போக்குவரத்து அமைச்சகம் சென்னை விமான நிலையத்திலும் கபே தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த உதான் யாத்ரீ கபேவில் டீ பத்து ரூபாய்க்கும், காபி இருபது ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர தண்ணீர் பாட்டில், சமோசா, வடை உள்ளிட்ட உணவுப் பண்டங்களும் குறைவாக விலையில் விற்பனை செய்யப்படுவதால் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

மத்திய அரசின் மூலம் தொடங்கப்பட்டிருக்கும் இந்த உதான் யாத்ரீ கபேவில் உணவு வகைகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

விமான நிலையத்திற்குள் சென்றாலே உணவுக்காக மட்டுமே பல ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், குறைந்த விலையில் தரமான உணவுப் பண்டங்களை வழங்கும் இந்த உதான் யாத்ரீ கபே திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் திட்டமாக அமைந்திருக்கிறது.

Tags: தரமான உணவுவிமான போக்குவரத்துத்துறைchennai airportQuality food at affordable prices: Udan Yatri Cafe!உதான் யாத்ரீ கபே
ShareTweetSendShare
Previous Post

காங்கோவில் மர்ம நோய் : ரத்த வாந்தி எடுத்த பலர் மரணம்!

Next Post

அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதி – இளைஞர் கைது!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies