எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!
Aug 24, 2025, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் புளோரிடாவின் சதை உண்ணும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் மரணமடைந்த செய்தி பலரையும் உலுக்கியுள்ளது. இவ்வகை பாக்டீரியாக்கள் முகத்துவார பகுதிகளில் காணப்படும் நிலையில், கடலில் நீராடுபவர்கள், மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.

அமெரிக்காவில்  ஒரே மருத்துவ காரணத்திற்காக  4 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில், அவர்கள் நால்வரும் புளோரிடா கடலில் நீராடியதும், சதை உண்ணும் பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

(Vibrio vulnificus) விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற பெயர் கொண்ட இந்த பாக்டீரியா, கடலுடன் நன்னீர் கலக்கும் கழிமுக பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியா வகையைச் சேர்ந்தது என்றாலும், Vibrio vulnificus பாக்டீரியாக்கள் ஆபத்தானவை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

புளோரிடா கடலோர பகுதி 20 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமான வெப்ப நிலையைக் கொண்டிருப்பதால், இவ்வகை பாக்டீரியாக்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. காயங்கள், சிராய்ப்பு மூலமாகவும், பச்சையான கடல் உணவுகள் குறிப்பாகப் பச்சை சிப்பிகளை உண்பதன் மூலமாகவும் மனிதனுக்குப் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.

மனித உடலுக்குள் புகுந்ததும், காயத்தைச் சுற்றி அதிகப்படியான வலி, கொப்புளங்கள் ஏற்படும், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

இரத்த ஓட்டத்தில் எதிர்வினையாற்றும் இவ்வகை பாக்டீரியாக்கள், திசு மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சில நேரங்களில் உடல் உறுப்புகளைத் துண்டித்து நோயாளியைக் காப்பாற்றினாலும், பெரிய அளவில் பலனளிக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள், முதியவர்கள் இவ்வகை பாக்டீரியாக்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான சதை உண்ணும் பாக்டீரியாக்களிடம் இருந்து தப்பிக்க, வெதுவெதுப்பான கடல் நீரில் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும், கடல் உணவைச் சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Tags: Doctors warn: Flesh-eating bacteriaஎச்சரிக்கும் மருத்துவர்கள்சதை உண்ணும் பாக்டீரியாஅமெரிக்காவின் புளோரிடா
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம் – வணிகம், நிதி சேவை பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies