ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் - மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!
Jan 14, 2026, 02:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் – மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 30, 2025, 06:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் வெற்றி என பெருமிதம் தெரிவித்தார்.

தீவிரவாத முகாம்கள் 22 நிமிடங்களில் முற்றிலுமாக தாக்கி அழிக்கப்பட்டதாக கூறிய அவர். பாகிஸ்தானின் மூலை முடுக்கெல்லாம் சென்று தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை தவிடுபொடியாக்கி உள்ளதாக கூறிய அவர், அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லமையை ஆப்ரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழித்து ராணுவ கட்டமைப்பை சீர்குலைத்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் மோடி, உலக தலைவர்கள் யாரும் தாக்குதலை நிறுத்துமாறு கூறவில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் தற்காப்புக்காக நமது ராணுவம் போராடியதை எந்த நாடும் தடுக்கவில்லை என கூறினார். மொத்தமுள்ள 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே ஆப்ரேஷன் சிந்தூர் காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸின் ரிமோட் கண்ட்ரோல் பாகிஸ்தானிடம் இருப்பதாக விமர்சித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து ராணுவ தளவாட உடன்படிக்கைகளிலும் ஊழல் மலிந்திருந்ததாக குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ தளவாட உற்பத்திக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

காஷ்மீர் முதல் கச்சத்தீவு வரை காங்கிரஸின் கொள்கைகளால் தேசம் வருந்துவதாகக் கூறிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் தனது மறைமுக போரையும், பயங்கரவாத நடவடிக்கையையும் கைவிடும் வரை ஆப்ரேஷன் சிந்தூர் தொடரும் என்றும் தெரிவித்தார்

Tags: PoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.jammu Kashmir terro attackPM ModiOperation SindoorIndiaoccupied KashmirpakistanPahala attackparlimentlashkar e taiba
ShareTweetSendShare
Previous Post

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை – மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் இன்று விளக்கம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies