ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் - மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!
Jul 30, 2025, 09:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் – மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 06:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் வெற்றி என பெருமிதம் தெரிவித்தார்.

தீவிரவாத முகாம்கள் 22 நிமிடங்களில் முற்றிலுமாக தாக்கி அழிக்கப்பட்டதாக கூறிய அவர். பாகிஸ்தானின் மூலை முடுக்கெல்லாம் சென்று தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை தவிடுபொடியாக்கி உள்ளதாக கூறிய அவர், அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லமையை ஆப்ரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழித்து ராணுவ கட்டமைப்பை சீர்குலைத்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் மோடி, உலக தலைவர்கள் யாரும் தாக்குதலை நிறுத்துமாறு கூறவில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் தற்காப்புக்காக நமது ராணுவம் போராடியதை எந்த நாடும் தடுக்கவில்லை என கூறினார். மொத்தமுள்ள 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே ஆப்ரேஷன் சிந்தூர் காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸின் ரிமோட் கண்ட்ரோல் பாகிஸ்தானிடம் இருப்பதாக விமர்சித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து ராணுவ தளவாட உடன்படிக்கைகளிலும் ஊழல் மலிந்திருந்ததாக குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ தளவாட உற்பத்திக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

காஷ்மீர் முதல் கச்சத்தீவு வரை காங்கிரஸின் கொள்கைகளால் தேசம் வருந்துவதாகக் கூறிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் தனது மறைமுக போரையும், பயங்கரவாத நடவடிக்கையையும் கைவிடும் வரை ஆப்ரேஷன் சிந்தூர் தொடரும் என்றும் தெரிவித்தார்

Tags: Indiaoccupied KashmirpakistanPahala attackparlimentlashkar e taibaPoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.jammu Kashmir terro attackPM ModiOperation Sindoor
ShareTweetSendShare
Previous Post

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை – மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் இன்று விளக்கம்!

Related News

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

காதல் தகராறில் காரை ஏற்றி மாணவர் கொடூர கொலை : திமுக பிரமுகரின் பேரன் கைதான பின்னணி!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

ஆணவ படுகொலை வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை : எல். முருகன் குற்றச்சாட்டு!

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க யாருமே முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு : அண்ணாமலை

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி : டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies