ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் - மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!
Apr 29, 2026, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் – மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 30, 2025, 06:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் வெற்றி என பெருமிதம் தெரிவித்தார்.

தீவிரவாத முகாம்கள் 22 நிமிடங்களில் முற்றிலுமாக தாக்கி அழிக்கப்பட்டதாக கூறிய அவர். பாகிஸ்தானின் மூலை முடுக்கெல்லாம் சென்று தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை தவிடுபொடியாக்கி உள்ளதாக கூறிய அவர், அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லமையை ஆப்ரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழித்து ராணுவ கட்டமைப்பை சீர்குலைத்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் மோடி, உலக தலைவர்கள் யாரும் தாக்குதலை நிறுத்துமாறு கூறவில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் தற்காப்புக்காக நமது ராணுவம் போராடியதை எந்த நாடும் தடுக்கவில்லை என கூறினார். மொத்தமுள்ள 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே ஆப்ரேஷன் சிந்தூர் காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸின் ரிமோட் கண்ட்ரோல் பாகிஸ்தானிடம் இருப்பதாக விமர்சித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து ராணுவ தளவாட உடன்படிக்கைகளிலும் ஊழல் மலிந்திருந்ததாக குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ தளவாட உற்பத்திக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

காஷ்மீர் முதல் கச்சத்தீவு வரை காங்கிரஸின் கொள்கைகளால் தேசம் வருந்துவதாகக் கூறிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் தனது மறைமுக போரையும், பயங்கரவாத நடவடிக்கையையும் கைவிடும் வரை ஆப்ரேஷன் சிந்தூர் தொடரும் என்றும் தெரிவித்தார்

Tags: PoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.jammu Kashmir terro attackPM ModiOperation SindoorIndiaoccupied KashmirpakistanPahala attackparlimentlashkar e taiba
ShareTweetSendShare
Previous Post

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை – மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் இன்று விளக்கம்!

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies