உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? - நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!
Oct 9, 2025, 09:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Sep 13, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செவ்வாய் கிரகத்தில் பில்லியன் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழத் தகுதியானவையா? என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மார்ஸ் ரோவரை விண்ணுக்கு அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தின் புவியியல் அம்சங்களை ஆராய்ந்து தரவுகளைச் சேகரித்துப் பூமிக்கு அனுப்பி வரும் மார்ஸ் ரோவர் விண்கலம், தற்போது பிரமிக்க வைக்கும் தகவலை  பூமிக்கு அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வறண்ட நதி கால்வாயில் பாறைகள் இருப்பதை கண்டறிந்துள்ள விண்கலம், அது குறித்து சமிஞ்ஞைகளை  பூமிக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை நேரடியாகக் கண்டறியும் அளவுக்கு திறன் படைத்தது இல்லை மார்ஸ் ரோவர் விண்கலம் . மாறாக, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்ட இடங்களில் பாறைகளை ஊருடுவி, பின்னர் அது குறித்த தரவுகளைப் பூமிக்கு அனுப்பும் திறன்பெற்றுள்ளது. மாதிரிகளையும் சேகரித்து வருகிறது

அந்த வகையில் தான், வறண்ட நதி கால்வாயில் பாறைகள் இருப்பதாக மார்ஸ் ரோவர்  தகவல் அனுப்பியுள்ளது. இதன்மூலம் மட்டுமே, உயிரினங்கள் வாழத் தகுதியான கிரகம் செவ்வாய் என்ற முடிவுக்கு வந்து விட முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மார்ஸ் ரோவர் விண்கலம் இதுவரை 25 மாதிரிகளை சேகரித்து வைத்துள்ளது. மொத்தம் 30 மாதிரிகளை  சேமிக்கும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், செவ்வாய் கிரகம் தொடர்பான மேலும் பல விவரங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

2030-ம் ஆண்டில் தான் விண்கலம் பூமிக்குத் திரும்பும் எனக் கூறப்படும் நிலையில், அதுவரைச் செவ்வாய் கிரகம் தொடர்பான நேரடி மாதிரிகள் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.

அப்படி, நேரடியாக மாதிரிகள் கைக்குக் கிடைக்கும்போது, அண்டார்டிக்காவில் நுண்ணுயிரிகள் வாழ்வது எப்படி உறுதி செய்யப்பட்டதோ ? அதே போன்றதொரு சோதனையை மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய முடியும்.

எப்படி என்று கேட்கிறீர்களா, பொதுவாக SULFATE MINERAL-களை SULPHIDE – ஆக மாற்றும் குணம் கொண்டது நுண்ணுயிரிகள். மார்ஸ் ரோவர் விண்கலம் கொண்டு வரும் மாதிரிகளிலும் அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தால், செவ்வாய் கிரகமும் உயிரினங்கள் வாழத் தகுதியானது என்று உறுதியாகக் கூறலாம்.

Tags: Is Mars habitable? - NASA's Mars Rover's amazing discoveryசெவ்வாய் கிரகம்செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழத் தகுதியானவையா?
ShareTweetSendShare
Previous Post

சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டும் – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் கைது!

Related News

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

இன்ஹேலர்களால் ஏற்படும் காற்றுமாசு : ஆஸ்துமா நோயாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies