அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!
Oct 9, 2025, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!

Web Desk by Web Desk
Sep 21, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் எனப் பலர் அரசியலில் கால் பதித்ததை நாம் பார்த்துள்ளோம். ஆனால், முதன்முறையாக ஏ.ஐ.யும் தற்போது அரசியலில் கால் பதித்துள்ளது. எங்கு நடந்தது இந்தச் சுவாரஸ்ய சம்பவம். இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

ஜப்பானில் Path to Rebirth என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி உள்ளது. மேற்கு ஜப்பானில் முன்னாள் மேயராக இருந்த ஷின்ஜி இஷிமாரு என்பவர்  கடந்தாண்டு இந்தக் கட்சியை தொடங்கினார். ஜப்பானில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களில் போட்டியிட்ட இந்தக் கட்சி, தனித்துவமான ஆன்லைன் பிரச்சாரம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தது.

குறிப்பாக, டோக்கியோவில் நடைபெற்ற ஆளுநர்  தேர்தலிலும் Path to Rebirth கட்சி களம் கண்டது. அசுரத்தனமான ஆன்லைன் பிரசாரத்தைப் பயன்படுத்தி இந்தக் கட்சி 2ஆவது இடத்தைப் பிடித்தது. தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே முக்கிய தேர்தலில் 2ம் இடம்பிடித்தது தேசிய அளவில் பேசுபொருளானது.

டோக்கியோ ஆளுநர் தேர்தலில் கிடைத்த அங்கீகாரத்தால் உற்சாகமடைந்த ஷின்ஜி இஷிமாரு, ஜப்பானில் நடைபெற்ற மேல்சபைத் தேர்தலும் போட்டியிட்டார். ஆனால், அவரது கட்சி இந்த முறைப் படுதோல்வியடைந்தது. எந்தத் தொகுதியிலும் வெற்றிக் கிடைக்கவில்லை.

இதனால், மனஉளைச்சல் அடைந்த அவர், தோலவிக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, கோகி ஒகுமுரா என்ற 25 வயது இளைஞர் கட்சியின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர்தான் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, அரசியல் உலகைத் திடுக்கிட செய்துள்ளார். Path to Rebirth கட்சியின் அடுத்த தலைவராக இனி மனிதர்கள் யாருக்கும் இருக்க மாட்டார்கள் எனவும், ஏஐ-தான் இனி தலைவராக இருந்து தங்களை எல்லாம் வழிநடத்த போகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த ஏஐ தலைவருக்கு, தான் உதவியாளராக செயல்பட போவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜப்பானிய மக்கள் விலங்குகள் மீது கொண்டுள்ள அன்பை பிரதிபலிக்கும் வகையில், இந்த ஏஐ-க்கு பென்குயினின் வடிவம் வழங்கப்படும் என Path to Rebirth தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளை  போலவே, ஜப்பானிலும் அந்நாட்டுக் குடிமக்கள் மட்டும்தான் போட்டியிட முடியும். எனவே, Path to Rebirth கட்சியின் புதிய தலைவரான ஏஐ, எந்தத் தேர்தல்களிலும் போட்டியிடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை லட்சக்கணக்கான ஊழியர்களின் பணிகளை மட்டும் replace செய்து வந்த ஏஐ, தற்போது தலைமை  பொறுப்பில் இருப்பவர்களையும் replace செய்யத்தொடங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Path to RebirthjappanArtificial intelligence has entered politics: AI appointed as party leaderகட்சி தலைவராக AI நியமனம்ஜப்பானில் Path to Rebirth என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவின் அடுத்த குறி : எஸ்டோனியாவில் வட்டமிட்ட போர் விமானங்கள்!

Next Post

நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் – மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு!

Related News

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

இன்ஹேலர்களால் ஏற்படும் காற்றுமாசு : ஆஸ்துமா நோயாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies