அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!
Jan 18, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!

Murugesan M by Murugesan M
Sep 21, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் எனப் பலர் அரசியலில் கால் பதித்ததை நாம் பார்த்துள்ளோம். ஆனால், முதன்முறையாக ஏ.ஐ.யும் தற்போது அரசியலில் கால் பதித்துள்ளது. எங்கு நடந்தது இந்தச் சுவாரஸ்ய சம்பவம். இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

ஜப்பானில் Path to Rebirth என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி உள்ளது. மேற்கு ஜப்பானில் முன்னாள் மேயராக இருந்த ஷின்ஜி இஷிமாரு என்பவர்  கடந்தாண்டு இந்தக் கட்சியை தொடங்கினார். ஜப்பானில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களில் போட்டியிட்ட இந்தக் கட்சி, தனித்துவமான ஆன்லைன் பிரச்சாரம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தது.

குறிப்பாக, டோக்கியோவில் நடைபெற்ற ஆளுநர்  தேர்தலிலும் Path to Rebirth கட்சி களம் கண்டது. அசுரத்தனமான ஆன்லைன் பிரசாரத்தைப் பயன்படுத்தி இந்தக் கட்சி 2ஆவது இடத்தைப் பிடித்தது. தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே முக்கிய தேர்தலில் 2ம் இடம்பிடித்தது தேசிய அளவில் பேசுபொருளானது.

டோக்கியோ ஆளுநர் தேர்தலில் கிடைத்த அங்கீகாரத்தால் உற்சாகமடைந்த ஷின்ஜி இஷிமாரு, ஜப்பானில் நடைபெற்ற மேல்சபைத் தேர்தலும் போட்டியிட்டார். ஆனால், அவரது கட்சி இந்த முறைப் படுதோல்வியடைந்தது. எந்தத் தொகுதியிலும் வெற்றிக் கிடைக்கவில்லை.

இதனால், மனஉளைச்சல் அடைந்த அவர், தோலவிக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, கோகி ஒகுமுரா என்ற 25 வயது இளைஞர் கட்சியின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர்தான் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, அரசியல் உலகைத் திடுக்கிட செய்துள்ளார். Path to Rebirth கட்சியின் அடுத்த தலைவராக இனி மனிதர்கள் யாருக்கும் இருக்க மாட்டார்கள் எனவும், ஏஐ-தான் இனி தலைவராக இருந்து தங்களை எல்லாம் வழிநடத்த போகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த ஏஐ தலைவருக்கு, தான் உதவியாளராக செயல்பட போவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜப்பானிய மக்கள் விலங்குகள் மீது கொண்டுள்ள அன்பை பிரதிபலிக்கும் வகையில், இந்த ஏஐ-க்கு பென்குயினின் வடிவம் வழங்கப்படும் என Path to Rebirth தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளை  போலவே, ஜப்பானிலும் அந்நாட்டுக் குடிமக்கள் மட்டும்தான் போட்டியிட முடியும். எனவே, Path to Rebirth கட்சியின் புதிய தலைவரான ஏஐ, எந்தத் தேர்தல்களிலும் போட்டியிடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை லட்சக்கணக்கான ஊழியர்களின் பணிகளை மட்டும் replace செய்து வந்த ஏஐ, தற்போது தலைமை  பொறுப்பில் இருப்பவர்களையும் replace செய்யத்தொடங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: jappanArtificial intelligence has entered politics: AI appointed as party leaderகட்சி தலைவராக AI நியமனம்ஜப்பானில் Path to Rebirth என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சிPath to Rebirth
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவின் அடுத்த குறி : எஸ்டோனியாவில் வட்டமிட்ட போர் விமானங்கள்!

Next Post

நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் – மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies