தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? - அண்ணாமலை கேள்வி!
Sep 23, 2025, 03:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Sep 23, 2025, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூகநீதி என்று உதட்டளவில் பேசி நாடகமாடும் திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தூய்மைப் பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தினருக்கு உடனடியாக, தலா ₹40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழகத்தில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல், கையுறை கூட வழங்கப்படாமல், தூய்மைப் பணியாளர்கள் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

விஷவாயு தாக்கி உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கையில், தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், சுமார் 50 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால், திமுக அரசு இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், வீண் விளம்பரங்களுக்குச் செலவு செய்து கொண்டிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு வருவதற்கு, இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்? சென்னை ஐஐடி மாணவர்கள், தூய்மைப் பணியை மேற்கொள்ள, ஹோமோசெப் மற்றும் சிப்பாய் ஆகிய இரண்டு ரோபோக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இவற்றைப் பயன்பாட்டில் கொண்டு வர ஏன் திமுக அரசு இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? தனது தந்தைக்குச் சிலை வைக்க, மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு
நேரமும் நிதியும் இருக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? சமூகநீதி என்று உதட்டளவில் பேசி நாடகமாடும் திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: DMKMK StalinIs there no money to buy the necessary equipment for sanitation workers? - Annamalai Questionசமூகநீதி
ShareTweetSendShare
Previous Post

மும்பையில் உள்ள வங்கி கணக்கு ஒன்றில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ரூ.42 கோடி மாற்ற முயற்சி – கைதான இலங்கை பெண் வாக்குமூலம்!

Next Post

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

Related News

பாரிமுனை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடை!

தமிழக அரசு மின் கட்டணம், வரியை குறைக்க வேண்டும் – பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்!

காற்றில் விழும் திமுக கொடி கம்பங்கள் – விபத்துகள் நேரிடும் அபாயம்!

பிரதமரின் பிறந்த நாளையொட்டி 75 தம்பதிகளுக்கு சிறப்பு பூஜை!

கருணாநிதி சிலைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம்

சேலம் : மின்வாரிய ஒப்பந்த ஊழியரை கொலை செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு – உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

நான்கரை மணி நேரம் நீடித்த சூரிய கிரகணம்!

இந்திய பொறியாளர்கள் விகாஷ் குமார், சர்தக் மிட்டலுக்கு இக் நோபல் பரிசு!

கொல்கத்தாவில் கனமழை : இதுவரை 7 பேர் உயிரிழப்பு!

சைபர் தாக்குதலால் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு!

AI-ஐ பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு பரப்பும் பாகிஸ்தான்!

டென்மார்க் : நான்கு மணி நேரத்திற்கு பிறகு வான்வெளி திறப்பு!

ஆப்கனில் இருந்து டெல்லிக்கு விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு பயணம் செய்த சிறுவன்!

தாய்லாந்து : விமான நிலையத்தில் நின்றபடி 5.5 கிலோ டுரியன் பழத்தை சாப்பிட்ட குடும்பம்!

“காந்தாரா சாப்டர் 1” தமிழ் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies