பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!
Oct 9, 2025, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

Web Desk by Web Desk
Oct 4, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக் களம் போர்க் களமாக மாறியிருக்கிறது… மக்கள் போராடுவதை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான் ராணுவம், அடக்குமுறையை கையாண்டுள்ளது. போராட்டத்திற்கான காரணம்.. அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, 12 சட்டமன்ற தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும், மானிய விலையில் கோதுமை மாவு, நியாயமான மின்சார கட்டணம் உள்ளிட்ட 38 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு 12 அப்பாவி மக்கள் இரையாக்கப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள், அரசு எவ்வளவு ஒடுக்குமுறையை கையாண்டாலும், நீதி கிடைக்கும் வரை போராட்டத்திலிருந்து விலகமாட்டோம் என்றும் முழங்கியுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வளர்ச்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் அரசு, துரும்பைக் கூடக் கிள்ளிபோடவில்லை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் கையாண்டுவரும் அடக்குமுறை சம்பவங்கள் ஷெபாஸ் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியை மேலும் தூண்டியுள்ளது.

மக்கள் விரோத போக்குடன் செயல்படும் பாகிஸ்தான் அரசையும், ராணுவத்தையும் அவாமி ஆக்ஷ்ன் கமிட்டி கடுமையாக விமர்சித்துள்ளது. காஷ்மீர் சுதந்திரமாக இருப்பதாகக் கூறும் ஆட்சியாளர்கள், சுரண்டலையும், அடக்குமுறைகளையுமே தடையின்றி வழங்கி வருவதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மின் கட்டண உயர்வு, உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டம், தற்போது பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தை நேரடியாக எதிர்கொள்ளும் ஒரு முழுமையான இயக்கமாக மாறியுள்ளது.

ஆனால் இதற்கு நியாயமான தீர்வு காண முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான் அரசோ, பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய படையினரையும், ஆயிரக்கணக்கான வீரர்களையும் தயாராக நிறுத்திவைத்துள்ளது. அண்மையில் கைபர் பக்துன்கவா பகுதியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இது ஷெபாஸ் ஷெரீப் அரசுக்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Tags: pakistanRepression in Pakistan-occupied Kashmir: People riot against the governmentபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

Next Post

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Related News

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

இன்ஹேலர்களால் ஏற்படும் காற்றுமாசு : ஆஸ்துமா நோயாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies