நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சரண் அடைவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு - முதலமைச்சர்களுக்கு கடிதம்!
Feb 4, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சரண் அடைவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு – முதலமைச்சர்களுக்கு கடிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 25, 2025, 09:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக சரணடையவுள்ளதாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ள நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 18ஆம் தேதி ஆந்திரா, சத்தீஸ்கர், தெலங்கானா மாநில எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்று நக்சல் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களுக்கு கடந்த 22ஆம் தேதி மாவோயிஸ்ட் சிறப்பு மண்டல குழுவின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மாவோயிஸ்ட் இயக்கச் செயல்பாடுகளையும், ஆயுதப் போராட்டங்களையும் கைவிட்டு சரணடைய விரும்புவதாகவும், மாநில அரசுகள் வழங்கும் மறுவாழ்வு திட்டத்தை ஏற்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மாவோஸ்ட்டுகள் சரணடைய அடுத்தாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மூன்று மாநில அரசுகளும் நிதானத்தை கடைப்பிடித்து, தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தங்கள் முறையீட்டின் பின்னணியில் எந்த மறைமுக நோக்கமும் இல்லை என்றும்,
தொலைதுாரத்தில் உள்ள போராளிகளுக்கு தகவல் சென்று சேரும் வகையில், தங்களது கோரிக்கையை அடுத்த சில நாட்களுக்கு வானொலியில் ஒலிபரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: MAHARASHTRAMaoistsState Chief MinistersMaoists surrender announcementmadhya pradeshwest bengalTelanganaChhattisgarhJharkhand
ShareTweetSendShare
Previous Post

மக்கள்தொகையில் சரிவை சந்திக்கும் ஐரோப்பா : 2,100-ம் ஆண்டில் பாதியாக குறையும்?

Next Post

ஓபிஎஸ் தலைமையில் தனிக்கட்சி – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தகவல்!

Related News

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies