ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அரசு பேருந்தின் பின்புற சக்கரம் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து கல்புதூர் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. முத்துக்கடை ஆட்டோ நகர் அருகே பயணித்தபோது பேருந்தின் பின்புற சக்கரம் சாலையில் கழன்று ஓடியது.
இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர். தொடர்ந்து சாதுர்யமாகச் செயல்பட்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அரசுப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே இதற்குக் காரணமெனப் பயணிகள் குற்றம் சாட்டினர்.
















