இந்திய குடியுரிமையை துறந்து லட்சக்கணக்கானோர் வெளிநாட்டில் குடியேறிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வேலைவாய்ப்பு, பொருளாதார தேவைகளுக்காக உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளுக்கு இந்தியர்கள் சென்று வருகின்றனர். இதில் பெரும்பாலோனாரின் விருப்பம் என்பது அமெரிக்காவாகத் தான் இருக்கிறது.
இந்தச் சூழலில், 2011 மற்றும் 2019 க்கு இடையில் மட்டும் 11 லட்சத்து 89 ஆயிரத்து 194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில், 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், கொரோனோவால் ஏற்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், தூதரக மூடல்கள் மற்றும் செயலாக்க தாமதங்கள் காரணமாக வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் அந்த ஆண்டில் 85 ஆயிரத்து 256 பேர் மட்டும் குடியுரிமையை துறந்தனர்.
















