வெனிசுலாவில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது.
வெனிசுலாவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5ஆக பதிவாகின. இதன் எதிரொலியாக தலைநகர் காரகாஸ், மொரோன், ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தநிலையில், நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த நிலநடுக்கத்தால் இடுபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 235 பேர் உயிரிழந்தனர். சுமார் ஆயிரத்து 500 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வெனிசுலாவில் நிலநடுக்க எதிரொலியாக கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெனிசுலாவின் நிலநடுக்கம் ஏற்பட்டபோது வயதான மனைவியின் கைகளை இறுகப்பற்றி கணவன் பாதுகாத்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடக்க முடியாத நிலையிலும் முதிய தம்பதியின் பாசப்போராட்ட தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே நிலநடுக்கங்களால் நிலைகுலைந்த வெனிசுலா நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டுவதாக இந்தியா அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாகவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், வெனிசுலாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
















