போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார்.
போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் ‘ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்’ என்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரத்யேக விழிப்புணர்வு பாடலுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் உறுதிமொழியை வாசிக்க, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
பின்னர், போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, அந்த மாரத்தானில் முதலமைச்சர் விஜய்யும் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், பொதுமக்களுடன் இணைந்து ஒடினார். விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ரமணன், ஆனந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
















