கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்கவரி நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டென்மார்க் அரசின் ஒரு பகுதியாக உள்ள, தன்னாட்சி பெற்ற பகுதியாக கிரீன்லாந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
கிரீன்லாந்து அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என டென்மார்க் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் வாஷிங்டனில் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் அவசியம் என கூறினார்.
கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆதரவு அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்க வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















