திமுக ஆட்சியில் அனைத்து வகையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என்று கூறி வந்த திமுக அரசு,
ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல், மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் திமுக அரசின் துரோகத்திற்கு ஆளானவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்,
புதிய அரசு அமையும் போது, தகுதித் தேர்வை நடத்தி பாதிக்கப்பட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் தொடரச் செய்வோம் எனவும் அன்புமணி உறுதியளித்துள்ளார்.
















