துணை முதல்வர் உதயநிதி, தமிழர் பண்பாட்டிற்கும் இந்திய நிலைப்பாட்டிற்கும் எதிராக செயல்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் திமுக அரசு மற்றும் துணை முதல்வர் உதயநிதி குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, சகிப்புத்தன்மையையும், மாறுபட்ட கருத்துக்களையும், அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக்கொடுக்கும் தமிழர் பண்பாட்டை, உதயநிதியின் மொழிநடை பிரதிபலிக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், தமிழர் பண்பாட்டிற்கும், இந்திய நிலைப்பாட்டிற்கும் எதிராக உதயநிதி செயல்படுவதாக விமர்சித்தார்.
தொடர்ந்து, திமுக அரசை திறமையற்ற ஊழல் நிறைந்த அரசு என்று குறிப்பிட்ட பியூஷ் கோயல், தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிரான அலை வீசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
















