கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வராததால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கழிப்பறைகளில் தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\
இதனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் வேறு பிரிவுகளுக்கு சென்று கழிப்பறைகளை பயன்படுத்துவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, மருத்துவ நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நோயாளிகளின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
















