சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது எனக்கூறி இந்தியா நிராகரித்துள்ளது
ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம், ஜம்மு-காஷ்மீரில் உள்ள பக்லிஹார் மற்றும் கிஷன்கங்கா நீர்மின் திட்டங்களின் செயல்பாட்டுப் பதிவேடுகளை தாக்கல் செய்ய இந்தியாவுக்கு உத்தரவிட்டது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள சூழலில்,
அதன் கீழ் வரும் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை என்று பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம்,
இந்த நடுவர் நீதிமன்றமே சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டது என்றும், இதற்குத் தீர்ப்பு வழங்க எந்த அதிகார வரம்பும் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
















