சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் பழனிசாமி அளித்த புகார் மனுவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன், தனக்கு எந்த மன்னர்கள் மீதும் மதிப்பு, மரியாதை கிடையாது என்றும், அந்த மன்னர்கள் காலத்தில் தான் தமிழகம் குட்டிச்சுவர் ஆனது எனவும் பேசியதாக கூறியுள்ளார்.
இந்து கடவுள்களையும், தமிழ் பேரரசர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்டோரையும் இழிவுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், மொழி ரீதியாக மாநிலங்களுக்கு இடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
















