திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவரும் எதிரியாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அண்ணாமலை உட்பட பலருக்கும் தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், சில ஊடகங்கள் தவறுதலாக செய்தியை வெளியிடுவது வருத்தமளிப்பதாக கூறினார்.
அரசு ஊழியர்களை ஏமாற்றும் அளவிற்கு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக இருக்கும் நிலையில், திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான கருத்துக் கேட்பு வாகனம் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை அதில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர், கேட்டுக் கொண்டார்.
















